மன்னார்குடி, பிப். 03:
மன்னார்குடியில் நீண்ட ஆண்டுகளாக நிலவி வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, மன்னார்குடி வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்,
-
2 குற்றவியல் நீதிமன்றங்கள்
-
1 உரிமையியல் நீதிமன்றம்
-
1 சார்பு நீதிமன்றம்
-
1 குடும்ப நல நீதிமன்றம்
ஆகியவை இயங்கி வருகின்றன. இதில் சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் முழுமையாக வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் மற்ற நீதிமன்றங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், வழக்கறிஞர்களுக்கான கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றங்கள் பல்வேறு இடங்களில் பிரிந்து இயங்குவதால் வழக்கறிஞர்களும், வழக்குத் தொடுத்த பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று, மதுக்கூர் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் கட்டுமானம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
.jpg)
No comments:
Post a Comment