சித்ரா பௌர்ணமியையொட்டி தொன்மை சிறப்பு வாய்ந்த பெருகவாழ்ந்தான் அருகே உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேக ஆராதனை மற்றும் காவடி வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 May 2023

சித்ரா பௌர்ணமியையொட்டி தொன்மை சிறப்பு வாய்ந்த பெருகவாழ்ந்தான் அருகே உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேக ஆராதனை மற்றும் காவடி வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு.


அறுபடை முருகன் ஆலயங்களுக்கு நிகரான தொன்மை சிறப்புமிக்க ஆலயமான திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் பகுதியை அடுத்த கர்ணாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சித்ராபௌர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. புராதன சிறப்புவாய்ந்த இவ்வாலயமானது அறுபடை முருகன் ஆலயங்களுக்கு நிகரான சிறப்புக்கொண்ட பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது. 

பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கோவிலை அடைந்தனர்.  இதனை தொடர்ந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர்,  பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான  வாசனை திரவிய நிறுமணப்பொருட்களைக்கொண்டு மகாஅபிஷேகம் நடைபெற்றது.  

இதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் செடில்காவடி, அலகு காவடி, மின்னொலி அலங்கரத்தில் மிளிரிய கண்கவரும் காவடிகளை சுமந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு நேர்ததிகடனை செலுத்தி திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


பின்னர் முருகப்பெருமானுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது.  தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை மனமுருக வழிபட்டனர்.


- செய்தியாளர் தருண் சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad