திருவாரூரில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 December 2025

திருவாரூரில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


திருவாரூர், டிச.23:

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மோகனச்சந்திரன், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செல்வராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


விழாவில், 25 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் 24 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ சிறுபான்மையினர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.1,40,825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுபான்மையினர் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் இத்தகைய திட்டங்கள் பெரிதும் துணை புரியும் என நிகழ்ச்சியில் பேசப்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், நகர மன்றத் தலைவர்கள் புவனப்பிரியா செந்தில் மற்றும் பாத்திமா பஷீரா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad