அவரது வெற்றிக்கு தமிழ்நாடு அரசு, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வடுவூர் மேல்பாதி கிராம மக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் நீலன் அசோகன் தலைமையில், பள்ளி செயலாளர் நீலன் சுரேன், முதல்வர் குணசீலன் முன்னிலையில், தங்கப்பதக்கம் வென்ற கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸை வரவேற்று, ரூ.10,000 பணப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
மேலும், பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அபினேஷ் மோகன்தாஸ் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினார். அவர், தன்னுடைய தங்கப்பதக்கத்தை மாணவர்களுக்கு காண்பித்து,
“நான் பெற்ற வெற்றி உங்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கட்டும். உழைத்தால் எல்லாம் சாத்தியம்,”என்று கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.
இந்த பாராட்டுவிழாவில் வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பொன். கோவிந்தராஜ், வடுவூர் ஏஎம்சி கபடி கழகத்தின் ஞானஸ்கந்தன், சோழநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் செந்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக பாராட்டினர்.
© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpg)
No comments:
Post a Comment