திருவாரூர், நவம்பர் 5:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கமளிக்கும் வகையில், சிங்கப்பூர் தொழிலதிபர் பழனிச்சாமி அவர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
விசாலாட்சி அம்மாள் நினைவு அறக்கட்டளை நிறுவனரும், சிங்கப்பூர் தொழிலதிபருமான பழனிச்சாமி அவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2024–25 கல்வியாண்டிற்கான 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, திருமக்கோட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
-
முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ₹50,000,
-
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ₹25,000,
-
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ₹15,000 வழங்கப்பட்டது.
📘 10ஆம் வகுப்பு
-
முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தலா ₹25,000, ₹15,000, மற்றும் ₹10,000 வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பிடம் பெற்ற 24 மாணவர்களுக்கு தலா ₹1,000 வீதம் மொத்தம் ₹24,000 வழங்கப்பட்டன. மொத்தமாக ₹3 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை வழங்கிய பழனிச்சாமி, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளார்.
விழாவில் பேசிய தொழிலதிபர் பழனிச்சாமி அவர்கள்,
“மாணவர்களாகிய நீங்கள் கஷ்டத்தை உணர்ந்து படித்தால், உலகத்தை நீங்கள் தொடலாம். உங்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவே இந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது,” என கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
அப்பகுதி பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கல்வி ஊக்கத்தொகை வழங்கி வரும் பழனிச்சாமி அவர்களை மனமார்ந்த பாராட்டுக்களுடன் வரவேற்றனர்.
© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpg)
.jpg)
No comments:
Post a Comment