பின்னர் அச்சுதப்ப நாயக்கரும் விஜயராகவ நாயக்கரும் கோவிலை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி கட்டியதால் நாயக்கர் கால கட்டடக் கலை சிறப்பாக காணப்படுகிறது. குறிப்பாக, 54 அடி உயரம் கொண்ட ஒற்றைக் கல்கொடி மரத்தால் அமைக்கப்பட்ட படிப்பு, கோவிலின் அதிசயக் கட்டடத் திறமையை இன்று வரை உணர்த்துகிறது.
கோவிலின் திருப்பணி வேலைகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற ஜனவரி 28ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற பந்தல் கால் நடும் விழாவில், தாயார் தேரோடு பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு பந்தல் கால்கள் நட்டு பணி தொடங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடா இளவரசன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:
Post a Comment