ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர் ஆலய மகா கும்பாபிஷேகம் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 12 July 2024

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர் ஆலய மகா கும்பாபிஷேகம் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.


நவக்கிரங்களில் சுப கிரமான குருபகவான் எழுந்தருளியுள்ள குருபரிகாரதலமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. 

இந்த கும்பாபிஷேகவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கால யாகபூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வந்தது. இன்று அதிகாலை 6ஆம் கால யாகபூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. பின்னர் மல்லாரி இசையுடன் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஆலய வலம் வந்து சுவாமி, அம்பாள், ராஜகோபுரம் ,வினாயகர்,சுப்ரமணியர் போன்ற விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர். இந்த கும்பாபிஷேகவிழாவை ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.


-


திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad