கோட்டூரில் மத்திய மோடி அரசை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 July 2024

கோட்டூரில் மத்திய மோடி அரசை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மோடி அரசை கண்டித்து கோட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் குருவை சாகுபடி இன்றி வேலை இல்லாமல் பறித்தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உடனே வழங்கிட வேண்டும். 

விவசாயத்திற்கு தண்ணீரு தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் வீட்டு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்கி ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 


இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து , முன்னாள் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் சிவ.புண்ணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad