திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்றத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுரித்தி வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரியின் கிளை தலைவர் எஸ். சுமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் க. கோபி, மாவட்டக்குழு உறுப்பினர் எம். சந்துரு முன்னிலையில் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கல்லூரியின் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், முருகானந்தம், கபிலன், ஜெயஸ்ரீ, பிரியங்கா, மற்றும் கபிலன், ரதன்ராஜ், தர்ஷன், விஷ்வா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment