திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி ஊராட்சியில் மிகவும் பழமையான ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அதை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருக்கு கோரிக்கைமனு அளித்தனர்.
இதை அடுத்து பழங்குடி ஊராட்சிக்கு 22 லட்சத்தி 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி வழங்கப்பட்டது. அதன் பெயரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலம் சங்கர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கமலராஜன், கிராம வட்டார வளர்ச்சி செயலாளர் தெய்வநாயகி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ,மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment