திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் விதமாகவும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் நலத்திட்டங்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்தும் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில், துண்டு பிரசுரங்கள் வழங்கி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடியேசத்து துவக்கி வைத்தார், இந்த பேரணியானது தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி வழியாக சென்று கௌரி சாமி பள்ளியில் முன்பு பேரணி நிறைவடைந்தது. இந்த பேரணியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் நகர் மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment