திருவாரூர் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண் தலைவர்கள் போன்று வேடமிட்டு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

திருவாரூர் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண் தலைவர்கள் போன்று வேடமிட்டு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.


மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் அமைந்துள்ள தனியார்  கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பீனிக்ஸ் பெண்கள் பாதுகாப்பு குழு சார்பில்  பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக  திருவாரூர் விளமல் பகுதியில் இருந்து  திருவாரூர் நகராட்சி வரை முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். 

இந்த பேரணியின் போது கல்லூரி மாணவிகள் சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் பெண் சாதனையாளர்கள் போன்று  வேடமிட்டு பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad