திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழா: ஸ்ரீசந்திரசேகரர் பட்டோற்சவ விழா. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 March 2024

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழா: ஸ்ரீசந்திரசேகரர் பட்டோற்சவ விழா.


திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி பட்டோற்சவ விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இவ்விழாவின் ஒருபகுதியாக ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது சார்பாக ஆலயத்தின் தொடர் உற்சவத்தை நடத்திட வேண்டி தனது நெற்றி பட்டத்தை ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு வழங்கும் வைபவம் பட்டோற்சவ விழாவாக இன்று நடைபெற்றது. இத்தகைய சிறப்பு விழாவின்படி ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு விஷேச சாயரட்சை பூஜையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.  

தொடர்ந்து ஆலயத்தின் 2வது பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்க்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு சுவாமிக்கு சக்கரை பொங்கல் படையலிட்டு நைவேத்தியம் செய்து, விஷேச அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி ஆலய பிரதான பிரகாரத்தையும், ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகள் வழியாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


மேலும் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 11 நாட்களுக்கு ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி இந்திர விமானம், பூதவாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


- செய்தியாளர் ஆர் தமிழரசன் 

No comments:

Post a Comment

Post Top Ad