மன்னார்குடியில் உள்ள தொன்மை சிறப்புமிக்க வரசித்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 February 2024

மன்னார்குடியில் உள்ள தொன்மை சிறப்புமிக்க வரசித்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வடக்கு வீதி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் புதுப்பிக்கப்பட்டு மூன்று தினங்கள் விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை உடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது.  

இன்று காலை இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடத்தப்பட்டது. பின்னர் கோவிலின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து கோபுர கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் மூலஸ்தான சன்னதியில்  வரசித்தி  விநாயகர், விஷ்னு துர்க்கை, பஞ்சமுக ஆஞ்சநேயர், உள்ளிட்ட  பரிவார  தெய்வங்களுக்கு  மகா அபிஷேகம் நடைபெற்றது. 


இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தையும், அதனை தொடர்ந்து மகா அபிஷேகத்தையும் கண்டுகளித்து இறைவனது  அருளைபெற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad