தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிகள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 October 2023

தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிகள்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே  சவளக்காரன் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசினர்  மேல்நிலைப் பள்ளியில்  ஏழை எளிய மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவிகள் கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவிகள்  தற்போது ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டியில் ஆஷிகா , இனியா , ஆகியோர்  வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு தமிழக அரசு விளையாட்டு துறை சார்பில் ரூ 1 லட்சம் ரொக்க பணம் மற்றும்   ராஜஸ்தான்  மாநிலம் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டி தேசிய அளவில் பங்கு பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு சவளக்காரன் பள்ளியின் முன்னாள் கால்பந்து விளையாட்டு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கிராம மக்கள் பாராட்டி வரவேற்றனர்.


மேளதாங்கள், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கிராம மக்கள் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் தேசிய அளவில் பங்கு பெற்று சாதனைகள் புரிந்து திருவாரூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கு பெருமை தேடி தந்து வருகின்றனர். 


அவர்களை தமிழக அரசு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிக்ச்சியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் எஸ்.பாப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், கல்விக்குழு உறுப்பினர் பி.முருகப்பா, மாணவர் மன்ற பொருளாளர் க.கோபி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad