
ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் பாசனம் பெறுகிற ஆறுகளாக விளங்குகிறது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட வெள்ளநீர் முழுமையும் இது வழியாகத்தான் கடலுக்கு சென்று கலக்க வேண்டும், இந்த ஆறுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை ஆறுகள் புதர்மண்டி ஒட்டுமொத்தமாக நீரோட்டம் மாறிவிட்டது.
கரைகளை விட ஆற்றினுடைய நடுப்பகுதி மேடாக வந்துவிட்டது இதனால் பாசன காலங்களில் மிகப்பெரிய பாசன தட்டுப்பாடு ஏற்படுவதோடு பெரும் வெள்ள காலங்களில் கடலுக்கு வெள்ளை நீரை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு இழந்துவிட்டது.
இந்த ஆறுகள் முழுமையும் கடல் முகத்துவார டெல்டா மாவட்ட ஆறுகளை மறு சீரமைப்பு செய்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கிகளின் மூலம் 2016 ஆம் ஆண்டு 960 கோடி ரூபாய் நிதியினை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி பெற்று முதல் கட்டமாக 542 கோடி ரூபாய்க்கு அரிச்சந்திரா, அடப்பாறு, முள்ளியாறு உள்ளிட்ட ஆறுகள் தூர்வாரப்பட்டு முடிவடைந்து இருக்கிறது.
இரண்டாவது தவணையைப் பெற்று இந்த பாமணி ஆறு, கோரையாறு இதனை உள்ளடக்கிய கிளை ஆறுகள் தூர்வாரப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நிதிகளை பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக கோறையாரை, பாமணி ஆறு அதனுடைய கிளை ஆறுகளை தூர் வாருவதற்கான ஆசிய வளர்ச்சி நிதி வங்கியினை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் பாசன கால்வாய்களை மேசென்டரி ஒர்க் என்று சொல்லக்கூடிய கட்டுமானங்கள், மதகுகள், சிறுபாசன மதகுகளை செப்பனிடப்படுவதற்கான நிதியை கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு நிறுத்திவிட்டது.
இதனால் ஒட்டுமொத்த கிராமப் பகுதிகளில் இருக்கின்ற பாசன மதகுகள் சீரழிந்து பாசனம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார் .
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment