கிராம கமிட்டி வரவு செலவு கணக்கில் ஊழல் தட்டிக்கேட்ட கிராம கமிட்டி உறுப்பினர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 April 2023

கிராம கமிட்டி வரவு செலவு கணக்கில் ஊழல் தட்டிக்கேட்ட கிராம கமிட்டி உறுப்பினர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்.


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி மாதவன் கிராம கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி அனிதா திமுகவின் நீடாமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.


மாதவன் ஆளும் திமுகவின் பின்புலத்தில் தனது பதவிகளை தவறாக பயன்படுத்தி பெரும்  அராஜக அத்துமீறலை வெளிக்கொணரும் வகையில் புள்ளவராயன் குடிகாடு கிராமம் கமிட்டியை சேர்ந்த தங்கமணி வரவு செலவு கணக்கு அறிக்கையை கிராம கமிட்டிக்கு  ஒப்படைக்க மாதவனிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி மாதவன், தனது மனைவியும் ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா மற்றும் தனது மகனுடன்  வரவு செலவு கணக்கு அறிக்கையை கேட்ட தங்கமணியை நடுரோட்டில் இடைமறித்து அரிவாள், கம்பி, கட்டை என கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.  


இத்தாக்குதலில் கிராம கமிட்டி உறுப்பினர் தங்கமணி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு தலை, கால், மார்பு போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளும் தாக்குதலால் கடுமையாக பாதிப்பு  அடைந்தது.  உடனடியாக அக்கம்பக்கத்தினர் தங்கமணியை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தங்கமணியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நேற்று  தெரிவித்த  நிலையில் இன்று மன்னார்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் திமுக மேலிடம் வற்புறுத்தலின் பேரில் தங்கமணியை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றியது. 

 

இதுகுறித்து தங்கமணி கூறுகையில், எனக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனவும், பொதுவாக அரசு மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம்.  ஆனால் அரசு மருத்துவர்கள் எனக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் திமுக மேலிடம் வற்புறுத்தல் காரணமாக என்னை டிஸ்ஜார்ஜ் செய்வதிலேயே மும்முரமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்.


- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad