இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆளுநரின் வரம்பு மீறி பேசுவது தொடர்வது தமிழக மக்களுக்கு தலைகுனிவை உருவாக்கி இருக்கிறது.

மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தைக் கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்து பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலக கடிதம் குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.
இந்த நிலையில் சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து, நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே இது போன்ற நடவடிக்கைகளுக்காக தெலுங்கானா, மேற்கு வங்காள முதலமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி முடிவெடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment