டெல்டா காரர்கள் என்று சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக இலவச மும்முனை மின்சாரத்தை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வராக இருந்தவர் கலைஞர், அதன் பிறகு தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின்சாரம் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். நம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றும் மகத்தான திட்டத்தை தொடங்கி நடத்தி வரும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. 18 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியை இந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையான டெல்டாகாரர் என்பதை யாரும் மறந்து விடமுடியாது. பாஜக அண்ணாமலை தான் சொல்லியதால் தான் மத்திய அரசு நிலக்கரி திட்டத்தை ரத்து செய்தது என கூறி வருகிறார். நிலக்கரி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டு ரத்து செய்யப்பட்டதை விவசாயிகள், பொதுமக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக கொண்டுவரும் திட்டங்களை தொடர்ந்து தடுத்து நிறுத்தி அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment