தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழைக்கு நன்னிலம் பகுதியில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 November 2022

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழைக்கு நன்னிலம் பகுதியில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழையின், தீவிரத்தால், வழக்கத்திற்கு அதிகமாக, கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின், பொதுப்பணித்துறை கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறுகளை, தூர்வாரி, கரைகளை பலப்படுத்திய நிலையில், ஏ பிரிவு மற்றும் பி பிரிவு பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள், தூர்வாரியதால், சமீப காலமாக பெய்து வரும் கனமழையால், பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பள்ளமான இடங்களில் அமைந்துள்ள, விளைநிலங்களின் பயிர்கள், மழை நீரில் மூழ்கி, மெல்ல மழைநீர் வடிய, தொடங்கிய நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க, வேளாண்மை துறையின் விரிவாக்கம் மையங்கள், பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்கள் தந்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழை, விவசாயத்தை பாதிக்கும் என்ற நிலையில், தமிழக அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெற, கால நீட்டிப்பையும் செய்துள்ளனர். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும், பாதிப்புகளை கணக்கீடு செய்வதற்கும், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு, தமிழக அரசு வழிகாட்டுதல் தந்துள்ளது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள், ஆர்டிஓக்கள், மாவட்ட வருவாய் நிர்வாகம், பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, மழை நீர் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து, அதற்கு ஏற்ப உடனடி தீர்வுகளை காண, வழிவகை காணப்பட்டுள்ளது.


தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை, பருவமழை துவங்குவதற்கு முன்பே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.  தமிழக அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் என, நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad