வாஞ்சிநாதசுவாமி திருக்கோவிலில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ20000 திட்டச்செலவில் திருமணம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 November 2022

வாஞ்சிநாதசுவாமி திருக்கோவிலில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ20000 திட்டச்செலவில் திருமணம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில் சட்டமன்ற அறிவிப்பு 2022 -23 எண்:14 இலவச திருமணம் நடத்துதல் அறிவிப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால்  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம்  ரூ20000 திட்டச்செலவில் திருமணம் நடத்தபடுகிறது.

இத்திட்டதின் படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ள இந்து மதத்தை சேர்ந்த தகுதியான  மணமக்கள்  திருக்கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


திட்ட விபரம்: திருமாங்கல்யம் 2கிராம் தங்கள்-10000ரூ, மணமகள் ஆடை-2000ரூ, மணமகன் ஆடை-1000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார்க்கு. 20நபர்களுக்கு திருமண விருந்து-2000, பூமலை.புஷ்பம்-1000, பாத்திரவகைரா-3000, இதர செலவு -1000 இதரவிபரங்கள் திருக்கோயில் அலுவலகத்தில்  நேரில் அணுகி தெரிந்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad