நிகழ்ச்சியில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான கந்தவேல் துவக்கி வைத்தார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்களும், மருத்துவ குழுவினரும் முன்னிலை வகித்தனர். வலங்கைமானை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. விருப்பம் உள்ளவர்களுக்கு 50% கட்டண சலுகையில் அதிநவீன ஐ ஓஎல் சிகிச்சையும், கண்பார்வை குறைபாட்டுக்கு கண் கண்ணாடி வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கண் சிகிச்சை முகாமிற்கான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சைக்கான பரிசோதனை செலவு, உணவு, தங்குமிடம், பயண செலவு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் சேவா சங்கம் ஏற்றுக்கொண்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம் மற்றும் பட்டம் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழ் சேவா சங்க அறங்காவலர் சு.பா. ஞானகந்த வேல் அவர்களை பாராட்டினர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ் சேவா சங்கம் சார்பில் அறங்காவலர் ராகுல் காந்தி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மனக்குன்னம் ராவணன், மாநில சட்டப்பிரிவு ஆலோசகர் மணி சேகரன், வலங்கைமான் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் சண்முகவேல் மற்றும் வரதராஜன் பேட்டை என். மாரிமுத்து, வி.எஸ்.குமார் மற்றும் வலங்கைமான் தமிழ் சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment