மூன்று குற்றவியல் சட்டங்களை முன்பு இருந்தது போலவே ஆங்கில மொழியில் தர கோரியும், மூன்று குற்றவியல் சட்டங்களையும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைமுறைப்படுத்திட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ்பெற கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் விநாயகமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர் அணி தலைவர் பஞ்சமூர்த்தி முன்னிலையில் வழக்கறிஞர்கள் இளஞ்சேரன், நாகையன், விவேகானந்தன், கோவி. கண்ணன், புரட்சித்தூயன் செல்வகுமார்
மற்றும் விசிக துணை பொதுச்செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ரஜினிகாந்த், விசிக மைய மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன், மக்கள்அதிகாரம் நிர்வாகி ஆசாத் , திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜ்கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment