ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 5 July 2024

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.


திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை  சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும்.

மூன்று குற்றவியல் சட்டங்களை முன்பு இருந்தது போலவே ஆங்கில மொழியில் தர கோரியும்,  மூன்று குற்றவியல் சட்டங்களையும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைமுறைப்படுத்திட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ்பெற கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் விநாயகமூர்த்தி தலைமையில்  வழக்கறிஞர் அணி தலைவர்  பஞ்சமூர்த்தி முன்னிலையில் வழக்கறிஞர்கள் இளஞ்சேரன், நாகையன், விவேகானந்தன்,  கோவி. கண்ணன்,  புரட்சித்தூயன் செல்வகுமார்


மற்றும் விசிக துணை பொதுச்செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான  ரஜினிகாந்த், விசிக மைய மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன்,  மக்கள்அதிகாரம் நிர்வாகி ஆசாத் , திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜ்கருணாநிதி  உள்ளிட்ட ஏராளமானோர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad