ஆனால் 2015 ம் ஆண்டு முதல் பிஜேபி அரசு நூறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் அதற்கான நிதியை முடக்கி வருகிறது இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டதி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக அனைத்து ஊராட்சிகளும் தொடங்க வேண்டும்.
சட்ட கூலி ரூ.319 குறைக்காமல் வழங்கிட வேண்டும், மண் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விரோத பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பின்னர் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சியில் நூறு நாள் திட்டத்தை தொடங்க வேண்டும் என கையெழுத்திட்டு மனுக்களை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினார்கள். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஊராட்சிகளி்ல் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment