திருவாரூர் புதிய ரயில்நிலையம் முன்பு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யகோரியும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும்.
ஒன்றிய கல்விஅமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட திருவாரூர் மாவட்ட விடுதலை தமிழ்ப்புலிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டதை சோகப் பாடல்கள்பாடி பொதுமக்களுக்கு விளக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தளபதிசுரேஷ், ரேடியோ வெங்கடேஷ், திருவாரூர் மைய மாவட்டச் செயலாளர் எண்கண்பாரதி, திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் செருகைசுரேஷ், தஞ்சை மேற்கு மாவட்டத் தலைவர் சேவியர், மகளிர் அணி நிர்வாகிகள் குடந்தை ரோஸ்லின், ரமிலா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment