காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 June 2024

காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில்  ஓ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தில்  மருத்துவ பயன்பாட்டிற்கு  சுமார் ரூ 6.84 லட்சம் மதிப்பில்   காசநோய் பற்றி கண்டறியும்  20 பைனாகுலர் மைக்ராஸ்கோப் கருவிகளை   திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ   வசம் ஓஎன்ஜிசி முதன்மை பொதுமேலாளர் மனிதவள மேம்பாடு தலைமை அதிகாரி கணேசன்  வழங்கினர்.



இதனை திருவாரூர் மாவட்ட காசநோய் கழகத்தின் மூலம்   அடியக்கமங்கலம், கொட்டாரக்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பைனாகுலர் மைக்ராஸ்கோப் கருவிகளை  காசநோய் கண்டறியும்  பயன்பாட்டிற்காக  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


இந்நிகழ்வில், ஓஎன்ஜிசி முதன்மை பொதுமேலாளர் மனிதவள தலைமை அதிகாரி கணேசன், ஓஎன்ஜிசி  முருகானந்தம்,  காசநோய்  திருவாரூர்மாவட்ட துணைஇயக்குனர் புகழ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad