கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் வெயிலின் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ,இளநீர், வெள்ளரி, நுங்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய மனித நேயம் காக்கும் கூல் ஃபிரண்ட்ஸ் நண்பர்கள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 April 2024

கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் வெயிலின் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ,இளநீர், வெள்ளரி, நுங்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய மனித நேயம் காக்கும் கூல் ஃபிரண்ட்ஸ் நண்பர்கள்.


தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலும் தன்னுடைய கோர முகத்தை காட்டுகிறது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம்நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர்.


அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில்  வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடா்ந்து  பள்ளி , கல்லூரி , பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு  நீர் , மோர் ,தர்பூசணி ,இளநீர், வெள்ளரி , நுங்கு உள்ளிட்ட பொருட்களை  25 நாட்களாக கூல் ஃபிரண்ட்ஸ் நண்பர்கள் மனித நேயத்துடன் வழங்கி வருகின்றனர்  


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad