கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து திமுகவினர் விடுதலை - மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 March 2024

கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து திமுகவினர் விடுதலை - மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு


ஒன்றிய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய திமுகவினர் மீது  பழிவாங்கும் நோக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றங்களில் நடந்து  பல்வேறு வழக்குகளில் திமுகவினர் விடுதலையாகி வருகின்றனர். அதேபோல் இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளில் திமுகவினர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடிய திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் இருந்தபோது அவர்களை கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது 


போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட 4 வழக்குகளில் இருந்து நன்னிலம் திமுக ஒன்றிய செயலாளர் கேப்டன் செல்வராஜ், பேரளம் நகர செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் என 16 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad