மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ உடனிருந்தார். இந்நிகழ்வில் அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசானது பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கி வருகிறது. பெண்களுக்கான உரிமைக்கான தொகையை முதன்முதலில் மாதந்தோறும் வழங்குவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான். உங்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் முகாம்களில் வழங்கி பயன்பெறவேண்டும்.
நீர்நிலை பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட முடியாத சூழ்நிலையின் காரணமாக அவர்களுக்கு மாற்று வழியில் வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, அரசானது மலைகுறவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது. என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைப் பட்டாவும், 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும், 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டாவும், 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களும் என 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 இலட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ. வழங்கினார்கள்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், வல்லூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி புதிய கட்டடத்தினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ. திறந்து வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, வல்லூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தினை அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கி துவக்கி வைத்தார்கள்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment