திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையத்தை வடசென்னைக்கு மாற்றம் செய்ய டெண்டர் விடுவதா? உடனே கைவிட வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் முதலமைச்சருக்கு வேண்டுகோள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 June 2023

திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையத்தை வடசென்னைக்கு மாற்றம் செய்ய டெண்டர் விடுவதா? உடனே கைவிட வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் முதலமைச்சருக்கு வேண்டுகோள்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னார்குடி பாமணி உர ஆலையில் உற்பத்தி குறித்து நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது மன்னை என்று அழைக்கப்பட்ட மன்னை பா நாராயணசாமி  காவிரி டெல்டாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சாலையாக பாமணி உர ஆலை துவக்கப்பட்டது.


இது கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தியை நிறுத்தி வைக்கும், குறைத்து விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.  தற்போது உலகம் முழுமையிலும் டிஏபி, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் பாமணி உர ஆலையில் தயாரிக்கப்படும் உரம் முழுமையும் வேப்பம் கொட்டையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுபவை ஆகும்.


இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்,மண் வளம் பாதுகாக்க முடியும், பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து தடுக்க முடியும்.  பன்முகத் தன்மை கொண்ட இந்த உரம் தற்போதைய நிலையில் அவசிய தேவை ஆகியுள்ளது.  தற்போது 24 வகையான பயிர் ஊக்கிகள் தயாரிப்பு செய்து வருகின்றனர்.

உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன பாராட்டுக்குறியது. வரவேற்கதக்கது.  இருப்பினும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி பெருக்கத்தை மேற்கொள்வதற்கு உரிய அடிப்படை கட்டமைப்புகளை புதிய தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ள முதலமைச்சர் நேரில் பார்வையிட வேண்டும்.


மத்திய அரசு நேரடி பார்வையில் உர உற்பத்தி நிறுவனங்களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் நிதி உதவி பெற்று பாமணி உர ஆலை விரிவாக்கம் செய்து டெல்டா பகுதி விவசாயிகளை உரத்தட்டுப்பாட்டில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


இந்தியாவில் முதன்முதலாக புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திருமக்கோட்டை சுழலி மின் உற்பத்தி நிலையம் ஆகும் எரிவாயுவை மூலப்பொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையை காரணம் காட்டி 110 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையத்தை வடசென்னைக்கு மாற்றுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் 12.06.2023 க்குள் டெண்டர் கோரி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


இதனை உடனடியாக கைவிட வேண்டும்.  குறிப்பாக மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் மின்சாரம் தடையின்றி பெற்று வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.


இதனை நம்பி  2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார்கள்.   உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உள்ளிக்கோட்டை, மூவாநல்லூர் துணை மின் பகிர்மான நிலையங்கள் மூலம் பங்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால் அதனை காரணம் காட்டி வடசென்னைக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டுள்ளது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். 


குறிப்பாக குத்தாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலி மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலத்தடி நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு குளிரூட்டப்பட்ட புதிய தொழில்நுட்பம் முறையில் மாற்றம் செய்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை பின்பற்றி  திருமக்கோட்டை நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள   வேண்டும்  என தெரிவித்தார்    


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad