மன்னார்குடி அருகே வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி வாய்க்கால் தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 May 2023

மன்னார்குடி அருகே வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி வாய்க்கால் தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர்  கீழத்தெரு, ரோட்டுத் தெருவில் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வருஷமும் பெய்யும் மழையால் வீடுகளை சுற்றி மழைநீ்ர் தேங்கி விடுகிறது. மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது . இதனால் மழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் மிகவும் சிரமம் உள்ளாகி வருகின்றனர்.


இதனால் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் மேலும் அந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள், மதுபாட்டில்கள், கழிவு பொருட்கள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வடிகால் வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றியும், ஆக்கிரமிப்புகளை அகற்றயும் தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அரசூர் கீழத்தெரு தெருவில் வசிக்கும் விவசாயி பாஸ்கர் கூறுகையில், நியாயவிலை கடையையொட்டி செல்லும் கிராம புற இணைப்பு சாலை ஓரத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து பிரிந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகிறதோடு மேலும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இதனை உடனடியாக தூர்வார வேண்டும் காலப்போக்கில் இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து உள்ளது.


இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே கொள்ளிடம் கடைத்தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad