கூத்தாநல்லூர் அருகே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 3 April 2023

கூத்தாநல்லூர் அருகே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்பு.


ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு நிகழ்வுகளை நடத்துவதும் மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். 

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே நாகங்குடி மற்றும் சாத்தனூர் கிராமத்தில் பெரிய பள்ளிவாயில் இஸ்லாமியர்கள ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள் இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த அனைத்து மதத்தினரும்  கலந்து கொண்டனர் .


செய்தியாளர் தருண் சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad