திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டகச்சேரி கிராமத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் ஆனி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு கோயில் திருவிழாவிற்காக . ஊர் பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் வைப்பதற்கு, மரத்தின் மீது தூக்கி கட்டிய போது எதிர்பாராத விதமாக மின்கம்பி மீது பிளக்ஸ் பேனர் உரசியதால் அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் ( 15 ) மற்றும் ரூபன் (22) ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசபட்டு மயக்கம் அடைந்தனர் இவர்களை அருகில் இருந்த இளைஞர்கள் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோவில் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவர் பிளக்ஸ் பேனர் கட்ட முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment